மதுரை அருகே இறந்து போன கூலித்தொழிலாளி... இறுதிச்சடங்கில் உயிர் பிழைத்த அதிசயம்
மதுரை: மதுரை அருகே இறந்து போனதாக மருத்துவர் கூறிய கூலித்தொழிலாளி இறுதிச்சடங்கு செய்த போது உயிர்பிழைத்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த பெருமாள்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாண்டித்துரை. இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாண்டித்துரை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து உறவினர்கள் இறுதி சடங்கு செய்வதற்காக உறவினர்களுக்கு சொல்லி அனுப்பி மாலைகள், வேஷ்டி உள்ளிட்டவை வாங்கி வந்தனர்.
இறந்து விட்ட பாண்டித்துரையின் நெஞ்சில் அடித்து கொண்டு உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது திடீரென மூச்சு வெளியிட்டபடி பாண்டித்துரை எழுந்து உட்காரவே உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பலருக்கும் அழுகை நின்று போனது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது தனக்கு ஏன் மாலை போட்டு அழுகிறார்கள் என்று பாண்டித்துரை யோசிக்க ஆரம்பித்தார்.
இதனையடுத்து உறவினர்கள் உடனடியாக பாண்டித்துரையை மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது பாண்டித்துரை உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை அருகே மாண்டு போனதாக கூறப்பட்ட நபர் உயிருடன் மீண்டது பெருமாள் பட்டி அருகே அதிசயமாக பேசப்படுகிறது
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications