கிருஷ்ணகிரி கோர விபத்து... பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரியில் இருந்து கடந்த வெள்ளிக் கிழமை கர்நாடக மாநிலம் மாலூருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த லாரி ஒன்று கட்டுபாட்டை இழந்து பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த டிரைவர் வெங்கட்ராஜ் உள்பட 6 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பேருந்தின் ஓட்டுநர் வெங்கட்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications