அடுத்த 12 மணி நேரத்தில் பலவீனமடைகிறது காற்றழுத்தம்..
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி விடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தென் மேற்கில் நகர்ந்து வருகிறது. தற்போது சென்னையிலிருந்து 370 கிலோமீட்டர் தொலைவில் அது உள்ளது.

இது மேலும் தென் மேற்கில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் பலவீனமாகி, குறைந்த காற்றழுத்தமாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தால் பெருவாரியான மழையை எதிர்பார்க்க முடியாது. அதேசமயம் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்க முடியும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தமிழகத்தின் உட்பகுதியில் பரவலாக மழையை எதிர்பார்க்க முடியுமாம்.












Click it and Unblock the Notifications