ஜெ வீட்டில் பணம், நகைகளைத் திருடிய 'நாய்' மாதவன்! - நடு ரோட்டில் பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை: தீபாவின் கணவன் மாதவனை திருடன் என்றும், ஜெயலலிதா வீட்டில் நகை, பணத்தைத் திருடியவர் என்றும் நடு ரோட்டில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார் ராஜா என்பவர். இதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் ஜெ தீபா.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை பெரும் பரபரப்பாக்கிவிட்டது தீபா அன்ட் கோ. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டுக்குச் சொந்தம் கொண்டாடி தீபாவும் அவர் கணவர் மாதவனும் செல்ல, அங்கே உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த கலாட்டாக்கள்தான் நேற்று முழுவதும் மீடியாவை ஆக்கிரமித்தன.

தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காததால், நடு ரோட்டில் நின்றபடி சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றும், தன் தம்பி தீபக்கை எச்சக்கல, பொறம்போக்கு நாய் என்றும் திட்டிக் கொண்டிருந்தார் தீபா. உடன் கணவர் மாதவனும் இருந்தார்.
அப்போது ராஜா என்ற நபர் தீபாவை, நீ வா போ என ஒருமையில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார்.
'உன்னையே யாருன்னு தெரியாதுன்னு சொல்லிட்டான் தீபக்... பாத்தியா ராஜா' என்று தீபா சொன்ன போது, 'அதை நான் பாத்துக்கறேன்... நீ போ..' என்கிறார் ராஜா என்பவர்.
பின்னர் தீபா கணவர் மாதவனைப் பார்த்து, 'எச்சக்காசுக்கு அலையுற.. நாயே... அம்மா வீட்டில் பணம் நகையைக் கொள்ளையடிச்சவன்தானேடா நீ... நாயே நாயே.. பணம் பிடுங்க இப்ப வந்திருக்கியா... ஒழிச்சிடுவேன்' என ராஜா திட்ட, பதிலுக்கு 'ஆமா.. நான் திருடியதை விளக்குப் புடிச்சி பாத்தியா நீ' என்கிறார். இதையெல்லாம் தீபா அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா மர்மமான சாவுக்குப் பிறகு அவர் வீட்டிலிருந்த ஏராளமான பணம், நகைகளை கூட்டாகப் பலரும் கொள்ளையடித்துள்ளனர் என்பதற்கான சின்ன சான்றுதான் நேற்று நடந்த இந்த கேவலமான சண்டை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications