படகு சின்னம் கிடைத்ததே ஆர்.கே. நகரில் தீபா ஜெயிக்கத்தான்... அடடே மாதவன்

ஆர்.கே.நகரில் படகுச்சின்னத்தில் போட்டியிடும் தீபா எளிதில் வெற்றி பெறுவார் என்று அவரது கணவர் மாதவன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி மீனவர்கள் அதிகம் உள்ள தொகுதி, அங்கே படகு சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் தீபா எளிதாக வெற்றி பெறுவார் என்று அவரது கணவர் மாதவன் கூறியுள்ளார்.

தீபா கேட்டுக்கொண்டால் அவரை ஆதரித்து ஆர்.கே. நகரில் பிரசாரம் செய்வேன் என்றும் மாதவன் கூறியுள்ளார்.

தீபாவின் கணவர் மாதவன். கடந்த சில மாதங்களாக தமிழக மக்களுக்கு அறிமுகமானவர். அவ்வப்போது தீபா உடன் தலை காட்டியவர் திடீரென தீபா உடன் கோவித்துக்கொண்டு தனிக்கட்சி தொடங்கப் போவதாக கூறினார்.

சுற்றுப் பயணம்

சுற்றுப் பயணம்

புதிய கட்சி தொடங்க போவதாக அறிவித்த மாதவன் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆங்காங்கே ஹோட்டல்களில் ஆலோசனை நடத்தி வருகிறார்.திருச்சி மாவட்டம் முசிறி எஸ்.பி.திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாதவன், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

தீபாவை முதல்வராக்குவேன்

தீபாவை முதல்வராக்குவேன்

தீபாவை முதல்வர் ஆக்குவதற்காகவே நான் புதிய கட்சியை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன் என்றார். கட்சி தொடங்கிய உடன் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் மாதவன் கூறினார்.

பதவி ஆசையில்லை

பதவி ஆசையில்லை

எனக்கு பதவி மீது ஆசை கிடையாது. கட்சி தொடங்குவது தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆதரவாளர்களை சந்தித்து வருகிறேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள் என்றார்.

வெற்றிச்சின்னம் படகு

வெற்றிச்சின்னம் படகு

ஆர்.கே.நகர் தொகுதி மீனவர்கள் அதிகம் உள்ள தொகுதி. இதனால் படகு சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் தீபா எளிதாக வெற்றி பெறுவார் என்று கூறிய மாதவன், தீபா அழைத்தால் தான் ஆர்.கே. நகரில் பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+