For Daily Alerts
Just In
"தீபம்" இதழின் பொறுப்பாசிரியர் ஸ்ரீனிவாச ராகவன் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை!
சென்னை: கல்கி குழுமத்தின் தீபம் இதழ் பொறுப்பாசிரியர் ஸ்ரீனிவாச ராகவன் மனைவியுடன் இன்று சென்னையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
கல்கி குழுமத்தில் இருந்து வெளிவரும் இதழ்களில் தீபமும் ஒன்று. இந்த இதழின் பொறுப்பாசிரியராக இருந்தவர் ஸ்ரீனிவாச ராகவன்.
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இன்று மாலை ஸ்ரீனிவாச ராகவனும் அவரது மனைவி ஜானகியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களுக்கு பள்ளிக்கூடம் செல்லும் சிறுவயது மகன் இருக்கிறான்.
இந்த தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Kalki Groups Deepam magazine editor in-charge Srinivasa Raghavan and his wife reportedly committed suicide at their Chennai Nesapakkam residence.
Story first published: Tuesday, October 20, 2015, 22:00 [IST]