லஞ்சப் புகார்… நக்கீரன் கோபால், இயக்குநர் மனுகண்ணன் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு!

Subscribe to Oneindia Tamil

Defamation case against Nakkeeran editor Gopal
சென்னை: லஞ்சம் கேட்ட மந்திரி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால், இயக்குநர் மனுகண்ணன் ஆகியோர் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

நக்கீரன் பத்திரிகையில் கடந்த 19-ந்தேதி வெளியான இதழில் லஞ்சத்தை எதிர்த்த படத்துக்கு லஞ்சம் கேட்ட மந்திரி என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியில் குறும்பட இயக்குனர் மனு கண்ணன் பேட்டி வெளியாகி இருந்தது.

அதில் தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் செய்தி துறை அமைச்சருக்கும் இந்த சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவதூறான செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

எனவே நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், குறும்பட இயக்குனர் மனுகண்ணன் ஆகியோர் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிடப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+