தமிழக மக்கள் திருந்த பல நூறாண்டுகள் ஆகும்.. தெய்வமகள் காயத்ரிக்கு ரசிகர் மன்றமாம்!
தெய்வமகள் சீரியல் வில்லி காயத்ரிக்கு இப்போது ரசிகர் மன்றம் ஆரம்பித்து பிளெக்ஸ் பேனரெல்லாம் வைத்து வருகின்றனர்.
சென்னை: தெய்வமகள் சீரியல் இப்போது டாப் கியரில் எகிறிக்கொண்டிருக்கிறது. வில்லத்தனம் செய்யும் அண்ணியார்தான் இப்போது இளசுகளின் தலைவியாகி வருகிறார். காயத்ரிக்கு ரசிகர்மன்றமெல்லாம் ஆரம்பித்து பிளக்ஸ் பேனர் வைத்து அலப்பறையை கொடுத்து வருகின்றனர்.
தெய்வமகள் சீரியல் சன்டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஜெய்ஹிந்த் விலாஸ் மூத்த மருமகள் காயத்ரி செய்யும் வில்லத்தனங்கள் ரத்தத்தை உறைய வைப்பவை. இப்படி எல்லாம் கூட நடக்குமா? எப்படி ரூம் போட்டு யோசிக்கிறாங்க என்று கரித்து கொட்டுகிறார்கள் இல்லத்தரசிகள்.

கணவர், குழந்தை, ஜெய்ஹிந்த் விலாஸ் வீடு ஆகியவற்றை அடைய மாமனார், மாமியார், கொழுந்தன்கள், ஓரகத்தி என அனைவரையும் அலறவைக்கும் காயத்ரியை சபிக்காத இல்லத்தரசிகளை இருக்க மாட்டார்கள். ஆனால் அவரது வில்லத்தனத்தை ரசிக்கும் இளசுகளோ இப்போது ரசிகர்கள் மன்றமே ஆரம்பித்து விட்டனர்.

சமுக வலைத்தளங்களில் காயத்ரிக்கு ரசிகர்கள் குழு இருக்கின்றன. அவரது புகைப்படங்களை பதிவிட்டு பாராட்டி வருகின்றனர் அண்ணியாரின் விழுதுகள்.
அதெற்கெல்லாம் ஒருபடி மேலாக இப்போது கிராமத்து திருவிழாக்களில் வரவேற்பு பேனரில் அண்ணியாரின் விழுதுகள் என்று போட்டு காயத்ரி ரசிகர் மன்றம் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

சினிமா நடிகர்களுக்கு மன்றம் ஆரம்பித்த ரசிகர்கள் இப்போது சீரியல் வில்லிக்கும் மன்றம் ஆரம்பித்து விட்டனர். இவங்க எல்லாம் எங்க இருந்துதான் கிளம்புறாங்களோ?












Click it and Unblock the Notifications