போயஸ் கார்டன் பங்களாவுக்குள் நுழைகிறது டெல்லி போலீஸ்! தினகரன் அறையில் சோதனை?

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் தினகரனுக்கென்று உள்ளதனி அறையில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் சிக்குகிறதா என்று டெல்லி போலீஸார் சோதனை நடத்த உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் தினகரனுக்கென்று உள்ளதனி அறையில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் சிக்குகிறதா என்று சோதனை நடத்த டெல்லி போலீஸார் திட்டம்மிட்டுள்ளனர்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்தார் என்பது வழக்கு. இவ்வழக்கில் புரோக்கர் சுகேஷ் சந்திரா, தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Delhi police are going to search in Poes Garden also

தற்போது டெல்லி போலீஸ் டிடிவி தினகரனை 5 நாள் கஸ்டடியில் எடுத்துள்ளது. இதையடுத்து தினகரனை இன்று சென்னைக்கு அழைத்து வந்த போலீஸார் சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்துக்கு சென்றுள்ள போலீஸார் தினகரனின் மனைவி முன்பு விசாரணை நடத்தினர். ரூ.10 கோடியில் சுகேஷிடம் இருந்து ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீதம் உள்ள பணம் ரூ.8.7 கோடி பணம் எங்கே என்பதும் குறித்தும் அதை வழங்கியது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து போயஸ் தோட்டத்துக்கும் போலீஸார் செல்லவுள்ளனர். அங்கு தினகரனுக்கென்று தனி அறை உள்ளதாகவும் அங்கு சோதனை நடத்தவும் டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+