மதசார்பின்மை முக்கியம் என்பதை உணர்ந்தும் ஆம் ஆத்மி வெற்றி: கனிமொழி
சென்னை: மதசார்பின்மை மிகவும் முக்கியம் என்பதை இந்த நாடு உணர்ந்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் டெல்லி தேர்தலில் பாஜக பெற்ற தோல்வி என்று கூறியுள்ளார் திமுக எம்.பியான கனிமொழி.
இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு எதிர்பார்க்க முடியாதவையாக உள்ளது. இந்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற்று, மொத்தமாக ஆம் ஆத்மி ஸ்வீப் செய்துள்ளதற்கான காரணத்தை எண்ணிப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது.

இந்த நாடு மதசார்பின்மையின் அவசியத்தை மிகவும் உணர்ந்துள்ளது என்பது டெல்லி தேர்தல் முடிவில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டிய பாடம். இவ்வாறு கனிமொழி கூறினார்.
இந்த தேர்தல் முடிவுகளை மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த மதிப்பெண் என்று கருத முடியுமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு "மோடி அரசு குறித்து கருத்து சொல்ல கால அவகாசம் தேவை" என்றார். முன்னதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து, ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான அலுவலரை மாற்ற கோரிக்கைவிடுத்தார் கனிமொழி.












Click it and Unblock the Notifications