இது காளிங்கராயனா.. சிலையின் முகத்தை மாற்ற கொமதேக கோரிக்கை.. போராடப் போவதாகவும் எச்சரிக்கை!
காளிங்கராயன் உருவசிலை முகத்தோற்றம் மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு: காளிங்கராயன் உருவசிலையின் முகத்தோற்றத்தை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக கொங்குநாடுமக்கள் தேசிய கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் சிலை முகத்தோற்ற சர்ச்சை அடக்குவதற்கு முன்பாக மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியில் காளிங்கராயன் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்ட சிலையின் முகத்தோற்றம் மாறி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

வரும் 13 ம் தேதி மணிமண்டபத்தையும் சிலையையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க உள்ள நிலையில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

சிலையின் முகத்தோற்றத்தை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் போராட்டம் நடத்தப்போவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் ஈரோடு ஆட்சியர் பிரபாகரிடம் அவர்கள் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications