For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது: கி.வீரமணி
சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பை விமர்சித்துள்ள கி.வீரமணி தமிழகத்தில் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று
அதிமுகவைச் சேர்ந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தமிழக சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் நீதிபதி சுந்தரும் இருவேறு முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பு அரசியல் தலைவர்களிடையே விமர்சனைத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இந்த தீர்ப்பு குறித்து இன்று தனது கருத்தை தெரிவிக்கையில், தமிழகத்தில் ஜனநாயகம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் பிழைக்குமா பிழைக்காதா என்பது பிறகே தெரியும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், தீர்ப்பு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளிவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Comments
English summary
President of Dravidar Kazhakam K.Veermani says Democracy of Tamilnadu is admitted in ICU. Also he reveal doubts in the case of 18 MLAs disqualified that Democracy will survive or die? However the transferred case to third judge should give appropriate judgement within time.