ரூபாய் நோட்டுகளுக்கு தடை.. டிச. 31 வரை எல்லா நோட்டும் செல்லனும்.. சிபிஐ போராட்டம்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: டிசம்பர் 31ம் தேதி வரை அனைத்து ரூபாய் நோட்டுகளும் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அதன் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈட்டனர்.

கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்தது. உடனடியாக, ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுக்களை மத்திய அரசுக்கும், மோடிக்கும் தெரிவித்தனர். மக்களே கூட சில இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். ஆனால், நடந்தது என்ன? பாராட்டிய அரசியல் கட்சித் தலைவர்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு ஜர்க்கடித்து மிக லேசாக திட்டத் தொடங்கினார். நடவடிக்கை நல்லதுதான். மக்கள் பாதிக்கப்படுவதுதான் என்று இழுத்தார்கள். பட்டாசு வெடித்து கொண்டாடியவர்கள் வங்கியின் முன்பு வரிசையில் நிற்கும் போது அனிச்சையாக மத்திய அரசைத் திட்டத் தொடங்கினார்கள்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் வங்கியிலும் பணமில்லை. ஏடிஎம் இயந்திரங்களிலும் பணம் இல்லை. மக்களிடமும் பணம் இல்லை என்ற நிலையில் கடுமையான சில்லறை நோட்டுகளுக்கு தட்டுப்பாடு எழுந்தது. குறிப்பாக, 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு எழுந்தது. எதைப்பற்றியும் கவலை இல்லை என்ற ரீதியில் மத்திய அரசு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பை பழைய ரூபாய் மாற்றுவது தொடர்பாக அறிவித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்; பழைய ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 31 வரை செல்லும்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; கருப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறி சாதாரண ஏழை, எளிய மக்களை பரிதவிக்க விடாதே என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தின் போது முன் வைக்கப்பட்டன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications