பழைய நோட்டுக்களை மாற்ற இனியும் தொடரக் கூடாது துயரம்... புதிய வங்கிகளைத் தொடங்க விஜயகாந்த் கோரிக்கை
பழைய ரூபாய் நோட்டுக்களை மக்கள் மாற்றுவதற்கு ஏற்ப புதிய வங்கிகளைத் தொடங்க விஜயகாந்த் கோரியுள்ளார்.
சென்னை: எல்லா பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமே செய்ய வேண்டும் என்பதால் புதிய வங்கிகளை தொடங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் மக்கள் ஈட்டிய பணத்தை பாதுகாப்பாக இருக்க வங்கிகளில் செலுத்தி தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறார்கள். தனியார் வங்கிகள், அரசு வங்கிகள் போல் செயல்படுகின்றனர்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அலுவலர்களின் மாதசம்பளம், ஓய்வு ஊதியம், பணப் பயன்கள், அனைத்தும் தற்போது வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. சிறு, பெரு வணிகர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் வங்கிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்கிறார்கள். முன்பு தமிழக அரசு கருவூலங்களில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதை வங்கிகளுக்கு மாற்றப்பட்டது.
மக்கள் தேவைக்கு ஏற்ப வங்கிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை, அரசு வங்கிகள், தனியார் வங்கிகளில் போதுமான பணியாளர்கள், அலுவலர்கள் இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ரூபாய் 500, 1000 பழைய நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுக்கள் வாங்க மக்கள் படும் துயரங்கள் இனியும் தொடரக்கூடாது.
எல்லா பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலம் தான் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்கிற நிலையில், தற்போதுள்ள வங்கிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனால் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூடுதலாக புதிய வங்கிகளை நிறுவிடவேண்டும். மேலும் வங்கிகளில் கூடுதலாக அலுவலர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications