யோகாசனம் மூலம் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்கள்!
எட்டயபுரம்: எட்டயபுரத்தில் டெங்கு நோய் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக மாணவர், மாணவியர்களின் யோகாசன நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நேரு யுவகேந்திரா, இன்டர்நேசனல் நேச்சுரோபதி ஆர்கனைசேசன் ஆகியவை சார்பில் மகாகவி பாரதி மணிமண்டப வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட ஓருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ் தலைமை வகித்தார். இன்டர்நேசனல் நேச்சுரோபதி ஆர்கனைசேசன் தலைவர் பிராங்கின், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநிலத் துணைத்தலைவர் எஸ்.பி.எம்.ராஜா, எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி வழக்குரைஞர் முருகானந்தம், தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் இளசை மணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு டெங்குநோய் தடுப்புமுறைகள் குறித்துப் பேசினர்.
இதையொட்டி நடைபெற்ற யோகாசனப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், கசவன்குன்று ஆர்.சி.நடுநிலைப்பள்ளி, எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளி, கோவில்பட்டி எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி, மாகாத்மா காந்தி தொடக்கப்பள்ளி, தூத்துக்குடி எஸ்.டி.ஆர். தொடக்கப்பள்ளி, பாரத் தொடக்கப்பள்ளி மற்றும் கோல்டன் தொடக்கப்பள்ளி மாணவர், மாணவியர்கள் பலர் பங்கேற்றனர்.
இதில், தூத்துக்குடி பாரத் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்கள் முதல் பரிசை வென்றனர். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர்கள்
விஜயலட்சுமி, அந்தோனி முத்துராஜ், சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக பயிற்சியாளர்கள் ஜோசப்ராஜ், சரவணசாமி, கருப்பசாமி, பாரதி முற்போக்கு வாலிபர் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் முத்துகுமார் உள்ளிட்ட மாணவர், மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இன்டர்நேசனல் நேச்சுரோபதி ஆர்கனைசேசன் மாநிலப் பொருளாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். கோவில்பட்டி ஜீவஅனுகிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் சந்திரசேகர் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications