அதி வேகமாகப் பரவும் டெங்கு, மர்ம காய்ச்சல்: திருவள்ளூர் ஜி.எச்சில் 102 பேர் அனுமதி
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 102 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 8 பேர் டெங்கு காய்ச்சலாலும், மற்றவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 87 பேர் அனுதிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 7 மணி அளவில் 99 பேராக உயர்ந்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி 102 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் அருந்ததியர் காலனியில் கடந்த 13ஆம் தேதி யுவராஜ் என்ற 6 வயது சிறுவனும், கடந்த 18ஆம் தேதி சந்தோஷ் என்ற சிறுவனும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன் மற்றும் மோகன் குமார் என்ற சிறுவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் திருத்தணியை சேர்ந்த ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் பல இடங்களில் தண்ணீர் வெளியேற முறையான வடிகால் இன்றி தேங்கி நிற்கிறது. மாவட்டத்தின் பல ஊர்களில் தெருக்கள் சகதியாக மாறி சேற்றுக்குட்டை போல் காட்சியளிக்கிறது. இது கொசு உற்பத்திக்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளது.
இதனால், இம்மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். டெங்கு குறித்து நடத்தப்படும் விழிப்புணர்வு முகாம், தடுப்பு நடவடிக்கை அனைத்தும் சம்பிரதாயத்திற்கு நடத்தப்படுவதாகவே உள்ளது.
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தவண்ணம் உள்ளனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று 87 பேர் அனுதிக்கப்பட்டுள்ளதாக நிலையில், இரவு 7 மணி அளவில் 99 பேராக உயர்ந்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி 102 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் குவிந்து வருவதால் பொதுமக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications