பீதியை கிளப்பும் டெங்கு.. இன்று மட்டும் இதுவரை 11 பேர் பலி!
தமிழகத்தில் அதிதீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் அதிதீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் நாள்தோறும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்த பாடில்லை.

மதுரையில் ஒருவர் பலி
டெங்கு காய்ச்சலால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மணல்மேடு வடக்குத் தெருவை சேர்ந்த விவசாயி முருகன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.

கல்லூரி மாணவி பலி
மதுரையில் மட்டும் ஒரே நாளில் 9 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்கள். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கருங்கம்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சந்தியா டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முசுறியில் இளைஞர் பலி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இந்திரா நகர் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. அப்பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முசுறியில் அருள் பிரசாத் என்ற இளைஞர் காய்ச்சலுக்கு பலியானார்.

சிகிச்சைப் பலனின்றி பலி
திருப்பூரில் திவ்ய தாரணி என்ற சிறுமி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ரமா என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார். ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சேலத்தில் 2 சிறுவர்கள்
இதேபோல் சேலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 2 சிறுவர்கள் இன்று பரிதாபமாக பலியானர்கள். சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஞானசேகரன் மகன் சிவசக்திவேல் மற்றும் மரவனேரியில் ரஷிதா எனும் சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications