முதல்வர் காரில் ஏற துணை முதல்வர் முயன்றதால் பரபரப்பு... பாதுகாப்பு அதிகாரிகள் அலர்ட்
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தவறுதலாக தனது காரில் ஏறுவதற்கு பதிலாக முதல்வர் காரில் ஏற முயன்றார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய காரை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்- வீடியோ
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனக்கு வழங்கப்பட்ட காரை விடுத்து மறதியாக முதல்வர் காரில் ஏற முயன்றதால் பரபரப்பு நிலவியது.
இன்று அதிமுக அலுவலகத்தில் காவிரி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என பங்கேற்றனர்.
இந்த கூட்டம் முடிவடைந்ததும் வெளியே வந்த துணை முதல்வர் ஓபிஎஸ், தன்னுடைய வாகனம் என கருதி முதல்வர் வாகனத்தில் ஏற முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் ஓபிஎஸ்ஸை அலர்ட் செய்ததால் சுதாரித்த அவர் அந்த காருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த தனது காரில் ஏறி புறப்பட்டார்.
ஜெயலலிதா இருந்தபோதும் சரி இறந்த போதும் சரி கொஞ்ச காலத்துக்கு முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். அந்த நியாபகத்தில் முதல்வர் காரில் ஏறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications