அந்தமான் படகு விபத்தில் சிக்கி உயிர் தப்பிய தமிழக டிஜிபியின் தம்பி
சென்னை: அந்தமானில் நடந்த படகு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார் தமிழக டிஜிபி சேகரின் தம்பியான கஜேந்திர வரதன். இவரும் போலீஸ் அதிகாரி ஆவார்.
கஜேந்திர வரதன், சென்னை அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் டிஎஸ்பியாக இருக்கிறார். இவர் தனது மனைவி வள்ளியுடன் அந்தமானுக்குச் சுற்றுலா சென்றிருந்தார். காஞ்சிபுரம் குழுவில் இவர்களும் இடம் பிடித்திருந்தனர்.
அந்தமானுக்குப் போன இடத்தில் நடந்த படகு விபத்தில் கஜேந்திர வரதனும், வள்ளியும் சிக்கக் கொண்டனர். இருப்பினும் இவர்களை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
அதேசமயம், வள்ளியின் உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது குழந்தையுடன் இந்த விபத்தில் உயிரிழந்து விட்டனர். கஜேந்திர வரதன் படகு விபத்து குறித்துக் கூறுகையில், அளவுக்கு அதிகமானவர்கள் படகில் ஏற்றப்பட்டனர். இதுவே விபத்துக்குக் காரணம். மேலும் படகில் உயிர் காக்கும் கருவிகள் ஏதும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications