தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் சீமான் போட்ட மெகா ஸ்கெட்ச்! திராவிட கோட்டையில் நாம் தமிழரின் பவர் ப்ளே
தர்மபுரி: தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுப்பதிலும், மண்ணின் வளங்களைப் பாதுகாப்பதிலும் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையானது அரசியல் கட்சிகளின் கவனத்தையும் பெற்று வருகிறது.. இதற்கு என்ன காரணம்???
எந்தவொரு அரசியல் நகர்வும் நேரத்தின் அடிப்படையிலேயே அதன் வெற்றியை தீர்மானிக்கிறது. பிப்ரவரி 5-ம் தேதி தருமபுரி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டபோது எழுந்த மக்கள் எதிர்ப்பைச் சரியாகக் கணித்த சீமான், பிப்ரவரி 14-ம் தேதியே அதாவது இன்றைய தினம் இது குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தர்மபுரி அரசியல்
இது தர்மபுரி மண்ணின் அரசியலை சீமான் எவ்வளவு நுணுக்கமாகக் கவனித்து வருகிறார் என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக, அரசு செய்துள்ள தற்காலிக மாற்றங்களைத் தேர்தல் கண்துடைப்பு என்று அவர் விமர்சித்திருப்பது, ஆளுங்கட்சியின் தற்காப்பு நடவடிக்கைகளை முறியடிக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை பாரம்பரியமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கு வங்கியையும், திராவிடக் கட்சிகளின் செல்வாக்கையும் கொண்ட ஒரு பகுதியாகும். இத்தகைய சூழலில், அங்கு நிலவும் ஒரு உள்ளூர் பிரச்சினையை மாநில அளவிலான பேசுபொருளாக மாற்றுவதன் மூலம் சீமான் தன்னை ஒரு மாற்று சக்தியாக நிலைநிறுத்துவதாகவும் தெரிகிறது.
தர்மபுரி பஸ் ஸ்டாண்டு
பொதுவாகச் சீமான் போன்ற தலைவர்கள் மாநிலம் தழுவிய பெரிய பிரச்சினைகளைப் பேசுவார்கள் என்ற பிம்பத்தை உடைத்து, ஒரு வார்டு அல்லது ஒரு நகரின் பேருந்து நிறுத்தப் பிரச்சினை வரை இறங்கி வந்து பேசுவது, அவர் 2026 தேர்தலில் தருமபுரியைத் தனது களம் காணும் தொகுதியாகத் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளதையும் உணர்த்துவதாகத் தெரிகிறது.
ஒரு தொகுதியில் செல்வாக்கு குறைவாக இருக்கும்போது, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகக் குரல் கொடுப்பதுதான் அந்தச் செல்வாக்கை உயர்த்துவதற்கான முதல் படியாகும்.
அப்படித்தான் இந்த பஸ் ஸ்டாண்டு பிரச்சினையைச் சீமான் கையில் எடுத்திருக்கலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த அறிக்கையின் பின்னணியில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம், இது தருமபுரியின் வணிகர் சங்கங்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் ஆதரவைத் திரட்டும் ஒரு மறைமுக யுக்தி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
சீமான்- நாம் தமிழர் கட்சி
தனியார் பேருந்து நிலையங்களின் ஆதிக்கத்திற்கு எதிராகப் பொதுத்துறை மற்றும் நகராட்சி வருவாயைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவரது குரல், இடதுசாரி சிந்தனையுள்ள வாக்காளர்களையும் நிச்சயம் கவர வாய்ப்புள்ளதாம்.
ஒருவேளை, 2026 தேர்தலில் சீமான் தருமபுரியில் போட்டியிட்டால், அவர் இந்த ஒரு அறிக்கையையே தனது பிரச்சாரத்தின் தொடக்கப் புள்ளியாகவும் பயன்படுத்த முடியும். "மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த அரசுக்கு எதிராக நான் அன்றே குரல் கொடுத்தேன்" என்று அவர் முன்வைக்கும் வாதம் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
திராவிட கோட்டை
தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் ஆய்வுகளும், மாற்று ஏற்பாடுகளும் மக்கள் மத்தியில் முழுமையான திருப்தியை ஏற்படுத்தாத நிலையில், சீமானின் இந்தத் தலையீடு பாதிக்கப்பட்ட வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை நாம் தமிழர் கட்சியின் பக்கம் திருப்பியுள்ளது. இது ஒரு தற்காலிக அறிக்கையாகத் தோன்றினாலும், தருமபுரியின் ஒவ்வொரு தெருவிலும் நிலவும் அதிருப்தியைத் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு உரமாக்கும் நுட்பமான வியூகமாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.
மொத்தத்தில், திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் இப்பகுதியில், எளிய மக்களின் அன்றாடப் பிரச்சினையான போக்குவரத்து வசதியை மையமாக வைத்து சீமான் காய் நகர்த்துவது மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications