தருமபுரியில் தள்ளுவண்டிக்காரர்களிடம் மாமூல் வசூலித்த ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்!
தருமபுரி: தருமபுரி நகரில் மாமூல் வசூலில் ஈடுபட்ட தலைமைக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் முனிராஜ். கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் முனிராஜ் தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி அந்த எல்லையிலுள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கெடுபிடி மாமூல் வசூலில் ஈடுபட்டுள்ளார்.

குறிப்பாக இரவு நேரத்தில் ரோந்து என்ற பெயரில் தள்ளுவண்டி மற்றும் டிபன் கடைகாரர்களிடம் மாமூல் வசூலித்து வந்ததுடன் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை ஓட்டி வரும் பொதுமக்களை மிரட்டியும் பணம் பறித்து வந்ததாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் லோகநாதனுக்கு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அனுப்பினர்.
இதுகுறித்து தனிப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முனிராஜ் பொதுமக்களிடம் இருந்து கட்டாய வசூல் செய்ததும் கடைகாரர்களிடம் இருந்து மாமூல் வசூலித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து முதல் கட்டமாக ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட முனிராஜை நேற்று அதிரடியாக "சஸ்பெண்ட்" செய்து உத்தரவிட்டார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications