‛‛எதிர்ப்புக்கு நடுவே பட்டண பிரவேசம்’’.. பக்தர்கள் சுமக்க பல்லக்கில் வலம் வரும் தருமை ஆதீன மடாதிபதி
மயிலாடுதுறை: கடும் எதிர்ப்புக்கு நடுவே மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டண பிரவேச நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. தருமபுரம் ஆதீனம் சிவிகை பல்லக்கில் இருக்க பக்தர்கள் அவரை சுமந்து 4 வீதிகளில் வலம் வருகின்றனர்.
மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் பழமையான தருமபுர ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான வைகாசியில் 10 நாட்கள் குருபூஜை நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான குருபூஜை கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த குருபூஜையின்போது மடத்தில் உள்ள ஸ்ரீஞானாம்பிகை உடனுறை ஸ்ரீஞானபுரீஸ்வரர் சவாமி கோவிலில் தினமும் விழா நடப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் தேரோட்டம் தொடங்கியது. தருமபுரம் ஆதீனத்தின் 4 ரத விதிகளில் தேரோட்டம் நடந்தது.
இந்நிலையில் தான் விழாவில் மனக்கிய நிகழ்ச்சியான பட்டண பிரவேச நிகழ்ச்சி இன்று தொடங்கி நடந்து வருகிறது. தருமபுர ஆதீன மடாதிபதியான ஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானேஸ்வர் சுவாமிகள் ஆபரணங்கள் பூண்டு சிவிகை பல்லக்கில் அமர பக்தர்கள் அவரை சுமந்து செல்கின்றனர். பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே சிவிகை பல்லக்கு நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பப்படுகிறது.
பொதுமக்கள் பூரண கும்ப மரியாதையுடன் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆதீனங்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக ஆதினம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு பக்தர்கள் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சுமந்து சென்றனர். அங்கு யானைகளைக் கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு தான் பட்டண பிரவேச நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் பட்டண பிரவேச நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மனிதனை மனிதனே சுமக்க கூடாது. இதனால் பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் எதிர்ப்புக்கு நடுவே தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டண பிரவேச நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications