கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்கள்: தள்ளுமுள்ளில் சிக்கிய தயாநிதி மாறன்!
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்களால் தள்ளுமுள்ளில் தயாநிதி மாறன் சிக்கினார்.
Recommended Video
சென்னை: கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்களால் தள்ளுமுள்ளில் தயாநிதி மாறன் சிக்கினார். இதையடுத்து போலீஸார் அவர் மீட்டனர்.
கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஏராளமாோர் அஞ்சலி செலுத்த அதிகாலை முதலே காத்து கிடந்தனர்.
இந்நிலையில் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரிக்கவே போலீஸாரால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. இதனிடையே தொண்டர்கள் விஐபிக்கள் வரும் வழியில் அத்துமீறி சுவர் ஏறி குதித்து கருணாநிதியின் முகத்தை பார்க்க சென்றனர்.
இதனால் பரபரப்பும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. கருணாநிதியின் உடல் அருகே ஏராளமானோர் குவிந்ததால் அங்கு போலீஸார் லேசான தடியடி நடத்தினர். அப்போது நடந்த தள்ளுமுள்ளில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சிக்கினார்.
இதையடுத்து போலீஸார் அவரை மீட்டு உரிய இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.