For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்கள்: தள்ளுமுள்ளில் சிக்கிய தயாநிதி மாறன்!

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்களால் தள்ளுமுள்ளில் தயாநிதி மாறன் சிக்கினார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சுவர் ஏறி குதித்த தொண்டர்கள் | பெரும் கூட்ட நெரிசல்...போலீஸ் திணறல்- வீடியோ

    சென்னை: கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்களால் தள்ளுமுள்ளில் தயாநிதி மாறன் சிக்கினார். இதையடுத்து போலீஸார் அவர் மீட்டனர்.

    கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஏராளமாோர் அஞ்சலி செலுத்த அதிகாலை முதலே காத்து கிடந்தனர்.

    Dhayanidhi Maran traps in crowd

    இந்நிலையில் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரிக்கவே போலீஸாரால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. இதனிடையே தொண்டர்கள் விஐபிக்கள் வரும் வழியில் அத்துமீறி சுவர் ஏறி குதித்து கருணாநிதியின் முகத்தை பார்க்க சென்றனர்.

    இதனால் பரபரப்பும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. கருணாநிதியின் உடல் அருகே ஏராளமானோர் குவிந்ததால் அங்கு போலீஸார் லேசான தடியடி நடத்தினர். அப்போது நடந்த தள்ளுமுள்ளில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சிக்கினார்.

    இதையடுத்து போலீஸார் அவரை மீட்டு உரிய இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    English summary
    EX Minister Dhayanidhi Maran traps in heavy crowd in Rajaji hall as the cadres get inside near Karunanidhi's body.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X