கொன்றது எப்படி... நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் நடித்துக் காட்டினார் ராம்குமார்?
சென்னை: 3 நாள் போலீஸ் விசாரணையின்போது நள்ளிரவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு போலீஸார் ராம்குமாரை அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து தான் சுவாதியைக் கொலை செய்தது எப்படி என்று ராம்குமார் நடித்துக் காட்டியதாகவும் போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் காவல்துறை வெளியிடவில்லை.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை ஜூலை 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துப் போலீஸார் விசாரித்தனர். அப்போது சுவாதியின் நண்பர் பிலால் சித்திக் குறித்து சில தகவல்களை ராம்குமார் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அவரையும் நேரில் வர வைத்து நேருக்கு நேர் அமர வைத்து விசாரணை நடத்தினர். இந்த நேருக்கு நேர் விசாரணை பல மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ராம்குமாரை போலீஸார் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கோ அல்லது அவர் தங்கியிருந்த மேன்ஷனுக்கோ அழைத்துச் செல்லவில்லை. இருப்பினும் நள்ளிரவில் அவரை அழைத்துச் சென்று நடித்துக் காட்டக் கூறி வீடியோவில் படமாக்கியதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது 13ம் தேதி நள்ளிரவுக்கு மேல் ராம்குமாரை போலீஸார் கூட்டிச் சென்றனர். யாரும் இல்லாத நேரமாக பார்த்து கூட்டிச் சென்றுள்ளனர். ஆட்கள் இருக்கும்போது கூட்டிச் சென்றால் பெரும் கூட்டம் கூடி விடும் என்பதால் இப்படியாம். பின்னர் அங்கு வைத்து சுவாதியைக் கொலை செய்தது எப்படி என்பது குறித்து ராம்குமார் நடித்துக் காட்டினாராம்.
கொலைக்கு முன்பு தான் வந்த வழி, சுவாதியை வெட்டியது, வெட்டு எப்படி விழுந்தது, எத்தனை முறை வெட்டினார், பின்னர் எப்படி ஓடினார், அரிவாளை என்ன செய்தார், மேன்ஷனுக்கு திரும்ப எந்த வழியாகப் போனார் என்பது உள்ளிட்டவற்றை ராம்குமார் நடித்துக் காட்டினாராம். இது வீடியோவில் பதிவு செய்யப்பட்டதாம்.
இருப்பினும் இதுகுறித்து போலீஸ் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications