ஆர்.கே.நகரில் தினகரன் ஜெயிப்பார்... 2019ல் இரு அணிகளும் இணையும் - சாமி ஆருடம்
ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஜெயிப்பார் என்றும் 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அணிகள் இணையும் என்றும் சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஜெயிப்பார் என்று பாஜக எம்.பி சுப்ரமணியசாமி கூறியுள்ளார். இவர் ஆரம்பம் முதலே தினகரனுக்கு ஆதரவாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தினகரனே முன்னிலையில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாமி, ஜெயலலிதா மரணம் தினகரனுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஆர்.கே. நகரில் தினகரன் ஜெயிப்பார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தது போல 2019ஆம் லோக்சபா தேர்தலில் அதிமுகவின் அனைத்து அணிகளும் இணையும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் அதிமுகவிற்கு தினகரன் தலைமையேற்பாரா என்று கூறவில்லை சுப்ரமணியசாமி.












Click it and Unblock the Notifications