ஆர்கே நகரில் அமோக வெற்றி... சான்றிதழை பெற்றார் டிடிவி தினகரன்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை அடுத்து அதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்வதற்காக ராணி மேரி கல்லூரிக்கு புறப்பட்டார்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை அடுத்து அதற்கான சான்றிதழை தினகரன் பெற்றுக் கொண்டார்.
ஆர்கே நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் காலை முதலே அனைத்து சுற்றுகளிலும் தினகரனே முன்னிலை வகித்தார்.

மொத்தம் நடைபெற்ற 19 சுற்றுகளில் அவர் 89,013 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து அவரது தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
இந்நிலையில் 57 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வெற்றி பெற்றுவிட்டார்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற ராணி மேரி கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.

கல்லூரிக்கு சென்ற அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயரிடம் ஆர்கே நகரில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தினகரன் பெற்றார்.
அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, தங்க தமிழ் செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications