For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்சி வேறு குடும்பம் வேறு.... யாருக்கும் அஞ்சமாட்டேன்... தஞ்சாவூரில் கடுகடுத்த தினகரன்!

கட்சியினராக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் எதிரிகளின் வலையில் விழுந்து விட வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

தஞ்சாவூர் : கட்சியினராக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் எதிரிகளின் வலையில் விழுந்து விடக் கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி. தினகரனுடன் இனி வரும் காலங்களில் சேர்ந்து செயல்படப் போவதில்லை என்று மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். இந்நிலையில் திவாகரனுக்கு ஆலோசனை கூறும் விதமாக தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்த போராட்டத்தில் டிடிவி. தினகரன் பொறிந்துதள்ளியுள்ளார்.

Dinakaran warns party cadres and indirectly Divakaran at Thanjavur meeting

கண்டன ஆர்ப்பாட்ட மேடையில் தினகரன் பேசியதாவது : எதிரிகளின் வலையில் யாரும் விழுந்துவிடக்கூடாது. கட்சியினரோ, குடும்பத்தினரோ யாராக இருந்தாலும் எதிரிகளின் சதியில் சிக்கி விடாதீர்கள். எனக்கு உறவு என்பது வேறு, குடும்பம் என்பது வேறு, நான் யாருக்கும் அஞ்சமாட்டேன், எதற்கும் அஞ்சமாட்டேன். கட்சியின் பெயருக்கு யாரும் களங்கம் ஏற்படுத்தக்கூடாது. சமூக வலைதளங்களில் அமமுக பற்றி தவறான கருத்தை பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

English summary
TTV. Dinakaran warns party cadres and indirectly Divakaran at Thanjavur meeting not to hope opposition gang and also adds party, family relationships were entirely different.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X