அம்மா இருந்தப்பகூட ஆளுநர் ஆய்வு நடத்தலாம், தப்பில்லை... "டேக் இட் ஈஸி"ய்யா... திண்டுக்கல் சீனிவாசன்
தமிழக ஆளுநர் ஆய்வு நடத்தியதை டேக் இட் ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
Recommended Video
கோவை: தமிழக ஆளுநர் கோவை மாவட்டத்தில் ஆய்வு நடத்தியதை டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
புதுவை ஆளுநர் கிரண்பேடி அங்கு முதல்வர் நாராயணசாமியின் கண்ணில் விரல் விட்டு ஆட்டாத குறையாக இருவருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் தலையிடுவது,ஆளுநருக்குண்டான அதிகாரங்களில் இருந்து வரம்பு மீறுவது என கிரண் பேடி மீது புதுவை அரசு குற்றம்சாட்டுகிறது.
இந்நிலையில் தமிழகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் முழு நேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு அவர் பதவியேற்றுக் கொண்டார். அவர் மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என்பதற்காக தமிழ் மொழி பயின்று வருகிறார்.
களத்தில் இறங்கிய...
கடந்த திங்களன்று கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து நேற்று களத்தில் இறங்கி குப்பைகளை சுத்தப்படுத்தினார்.
ஆய்வு செய்தார்
ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஆளுநர் பன்வாரிலால் பயோ டாய்லெட், தூய்மை இந்தியா உள்ளிட்ட திட்டங்களை ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் எனது ஆய்வு தொடரும் என்றார்.
திண்டுக்கல் சீனிவாசன் கருத்து
அரசை பாராட்ட வேண்டும் என்றால் ஆய்வு செய்தாக வேண்டும் என்று ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், தமிழக ஆளுநர் ஆய்வு நடத்தியதை டேக் இட் ஈசியாக எடுத்து கொள்ள வேண்டும்.
தவறில்லை
அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் நடத்தினாலும் அது வரவேற்புக்குரியது. ஜெயலலிதா ஆட்சியின்போது கூட ஆளுநர் ஆய்வு நடத்தியிருந்தாலும் அது தவறில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.