ஐபிஎல் எதிர்ப்பு: சென்னை அண்ணாசாலையில் இன்று மாலை 5 மணிக்கு புரட்சி பயணம்: பாரதிராஜா
ஐபிஎல் போட்டிக்கு எதிராக இன்று மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து புரட்சிப் பயணம் தொடங்கும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : ஐபிஎல் போட்டிக்கு எதிராக இன்று மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து புரட்சிப் பயணம் தொடங்கும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். கட்சி பாகுபாடின்றி பங்கேற்க அரசியல் தலைவர்களுக்கு விடுத்த அழைப்பை ஏற்று அவர்களும் தொண்டர்களை அனுப்பி வைக்க ஒப்புகொண்டுள்ளதாக பாரதிராஜா கூறியுள்ளார்.
தமிழர் கலை பண்பாட்டு இலக்கியப் பேரவையினர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது : கிரிக்கெட் வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள் என்று தான் சொன்னோம். எங்களின் இளைஞர்களை மழுங்கடித்துவிடாதீர்கள். இப்போது தான் இன உணர்வோடு ஒன்று சேர்ந்திருக்கிறோம் அதை அழித்துவிடாதீர்கள் என்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம் அது நடக்கவில்லை.

இருந்த போதும் தமிழ், எங்கள் மண், விவசாய மக்களுக்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். விவசாயிகளுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் நீதிமன்றத்தின் மூலம் மே மாதம் வரை அவகாசம் கிடைத்துள்ளது, இதை மேலும் ஒரு வழக்கு போட்டு ஜுன் மாதத்திற்கு தள்ளிப்போடலாம், ஆனால் அதற்குள் இங்கு விவசாயியும், விவசாயமும் மாண்டு போய்விடும்.
ஒரே நாடு என்று தேசியம் பேசும் போது அண்டை மாநிலத்திடம் இருந்து தண்ணீர் வாங்கித் தர முடியவில்லையா. தமிழர்களுக்கு இன்று தான் தங்களின் உரிமைக்காக ஒற்றுமை கிடைத்துள்ளது. எல்லா அமைப்பினரிடும் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம், எந்தக் கட்சிக் கொடியும் இல்லாமல் எல்லா அமைப்பினரும் ஒன்றாக வந்து போராடுவோம் என்று கூறி இருக்கிறார்கள்.
இன்று மாலை 5 மணியளவில் அண்ணா சிலையில் இருந்து ஒருங்கிணைந்து அங்கிருந்து எங்களின் புரட்சிப் பயணம் தொடங்கும். எப்படி இந்த போராட்டம் நடக்கப் போகிறது என்பதை அங்கு வைத்து அறிவிப்போம். ஐபிஎல்லுக்கு எதிராக முதலில் எங்களின் போராட்டம் பின்னர் படிப்படியாக போராட்டங்கள் நடைபெறும்.
முதல்வரை சந்தித்த போது ஐபிஎல் போட்டியை நிறுத்த முடியாதா என்றேன் அது எங்கள் வரையறைக்குள் இல்லை என்று கூறிவிட்டார். சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டியாவது ஐபிஎல் போட்டியை தடுத்திருக்கலாம். அறவழியில் போராட வேண்டாம் என்றால் எந்த வழியிலும் வருவோம். தன்மானத்தை காட்டிலும் உயிர் பெரிதில்லை என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
-
சூர்யவன்ஷியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? குடும்ப பின்னணி தெரியுமா? -
Vaibhav Suryavanshi: பொட்டு வச்ச தங்கக் குடம்.. லப்பர் பந்து சீனை ரீகிரியேட் செய்த வைபவ் சூர்யவன்சி! வீடியோவைப் பாருங்க! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications