For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் கடவுள் படத்தின் போது அஜித்துக்கு அன்புசெழியனால் நடந்தது என்ன? இயக்குநர் சுசீந்திரன் பகீர் தகவல்

நான் கடவுள் படத்தின் போது அஜித்துக்கு கந்து வட்டி பைனான்சியர் அன்புச் செழியனால் நடந்தது என்ன என்பதை இயக்குநர் சுசீந்திரன் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    அஜித்துக்கு அன்புசெழியனால் நடந்தது என்ன? இயக்குநர் சுசீந்திரன் பகீர் தகவல்- வீடியோ

    சென்னை: நான் கடவுள் படத்தின் போது அன்புச் செழியனால் தற்போது தற்கொலை செய்து கொண்ட அசோக்கின் மனநிலையில்தான் நடிகர் அஜித் இருந்தார் என பகீர் தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

    இது தொடர்பாக சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

    Director Suseenthiran‏ exposes director Anbu Chezhian's harrasment to Ajith

    அசோக் அண்ணனின் மரணம் தமிழ் சினிவால் கடைசி மரணமாக இருக்க வேண்டும். அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்து கொள்கிறேன்.

    "நான் கடவுள்' நேரத்தில் இந்த அன்பு செழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கல் லிங்குசாமி, கெளதம்மேனன், தயாரிப்பாளர்கள் முக்கால்வாசி பேர், பல நடிகர்களும் இந்த அன்புச் செழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஏன் இமான் இசையமைப்பாளரிடமும் கூட எந்த படத்துக்கு இசையமைக்க வேண்டும் என மறைமுகமாக சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் இந்த அவலநிலைக்குக் காரணமான அன்பு செழியன் தண்டிக்கப்பட வேண்டும்.

    மத்திய அரசுக்கும் வருவாய்துறைக்கும் ஒரு வேண்டுகோள்.

    தமிழ்நாட்டின் பாதிபனம் அன்புவிடம் இருக்கும். தயவு செய்து அவர் வீட்டிலும் ரெய்டு நடத்தவும்.

    இவ்வாறு சுசீந்திரன் கூறியுள்ளார்.

    English summary
    Producer and director Suseenthiran‏ has exposed the harrasment to Actor Ajith by Financier Anbu Chezhian.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X