தினகரனுடன் தொடரும் மோதல்.. மன்னார்குடியில் தனிக்கட்சியை தொடங்கினார் திவாகரன்!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்மா அணி என்ற கட்சியை திவாகரன் தொடங்கினார்.
திருவாரூர்: மன்னார்குடியில் அம்மா அணி என்ற கட்சியையும் தொடங்கிய திவாகரன் அதற்கான அலுவலகத்தையும் திறந்துள்ளார்.
சசிகலா குடும்பத்தில் பெரும் மோதல் வெடித்துள்ளது. தினகரன்- திவாகரன் இடையிலான சண்டை வீதிக்கு வந்துள்ளது.
சிறையில் இருந்து சசிகலா எவ்வளவோ எடுத்துக்கூறியும் திவாகரனும் தினகரனும் கேட்பதாக இல்லை. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறி தமிழக அரசியல் களத்தை சூடாக்கி கொண்டிருக்கின்றனர்.

அலுவலகம் திறப்பு
அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த திவாகரன், அம்மா அணி என்ற பெயரில் செயல்படுவோம் என கூறியிருந்தார். இந்நிலையில் மன்னார்குடியில் அம்மா அணி என்ற பெயரில் அலுவலகத்தை திவாகரன் திறந்து வைத்தார்.

புத்துயிர் தந்துள்ளேன்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் விரைவில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்கள் என்று அறிவித்தார். தினகரனால் இழுத்து மூடப்பட்ட அம்மா அணிக்கு புத்துயிர் தந்துள்ளேன் என்றும் திவாகரன் கூறினார்.

அழைப்பு விடுக்கமாட்டேன்
மேலும் அம்மா அணியில் இணைய அழைப்பு விடுக்கமாட்டேன் என்றும் விருப்பம் உள்ளவர்கள் அணியில் இணைவார்கள் என்றும் திவாகரன் தெரிவித்தார். ஜெயலலிதா முதன்முதலில் கட்சி தொடங்கியதுபோது என்னுடைய ஆதரவாளருக்குதான் பொறுப்புகளை தந்தார் என்றும் அவர் திவாகரின் கூறினார்.

எதிர்ப்பார்ப்பு அதிகரிப்பு
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் செயல்பட விருப்பம் இல்லாததால் அம்மா அணி அலுவலகம் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். திவாகரன் தனி அணி மற்றும் அலுவலகத்தை திறந்துள்ளதால் அவரது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications