பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு- முழுமையாக அமல்படுத்தக் கோரி தி.க.வினர் ஆர்ப்பாட்டம்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தக் கோரி கி. வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினர் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மண்டல் குழு பரிந்துரைகளின்படி மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த இடஒதுக்கீடு அளவு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது என்பதை அண்மைய புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

DK protests for 27% reservation

இதனைத் தொடர்ந்து 27% இடஒதுக்கீட்டை மத்திய அரசுப் பணிகளில் முழுமையாக அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தினர் இன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கினார். அப்போது 27% இடஒதுக்கீடை முழுமையாக அமல்படுத்தக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+