சந்தோசமாக தாலியை அகற்றிவிட்டு... மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட தி.கவினர்!
சென்னை: பெரியார் திடலில் இன்று காலையில் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தினர் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள் தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடைபோட்டனர் பெண்கள். இது என்ன அதிசயமாக இருக்கிறதே... தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா என்று யோசிக்கிறீர்களா? இது திராவிடர் கழகத்தினர் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை.

தாலி அகற்றும் போராட்டம்
அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி, திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, மாட்டுக் கறி உண்ணும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். உயர்நீதிமன்ற உத்தரவுடன் போலீஸ் பாதுகாப்போடு தாலி அகற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவு
உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை நடைபெறும் முன்பாகவேது இன்று காலை 7 மணிக்கு பெரியாரி திடலில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் தாலி அகற்றும் நிகழ்ச்சி தொடங்கியது. 10 மணிக்குள்ளாகவே தாலிகளை அகற்றி போராட்டத்தை நடத்தி முடித்தனர்.

தாலியை அகற்றி
அக்னி சாட்சியாக உறவினர்கள் புடைசூழ மேள தாளம் முழங்க கண்ணீர் மல்க கணவர் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்ட பெண்கள் இன்று பெரியார் திடலில் சட்டென்று கழற்றி சந்தோசமாக கையில் கொடுத்தனர். அப்போது ஏராளமானோர் உற்சாமாக கைகள் தட்டி வரவேற்பு கொடுத்தனர்.
மாட்டுக்கறி பிரியாணி
தாலி அகற்றும் போராட்டம் நடைபெற்று முடிந்த பின்னர் அங்கு வந்திருந்த அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி போடப்பட்டது. தாலியை அகற்றிய பெண்களும்... அதை கையில் வாங்கியவர்களும் மாட்டுக்கறி பிரியாணி விருந்துண்டு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

போராட்டம் வெற்றியாம்
இத்தனை களேபரங்களும் நடந்து முடிந்த பின்னர் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற பெஞ்ச் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு பெரியார் திடலுக்கு வரும் முன்னர் போராட்டம் முடிந்து போயிருந்தது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications