For Daily Alerts
Just In
குறைந்த நாட்களே நடத்துகிறார்கள்... தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரைப் புறக்கணித்த தே.மு.தி.க
சென்னை: மிகக் குறைந்த நாட்களே நடத்துவதாகக் குற்றம் சாட்டி தே.மு.தி.க. உறுப்பினர்கள் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரைப் புறக்கணித்துள்ளனர்.
இந்தாண்டிற்கான முதல் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நேற்று நண்பகல் 12 மணிக்கு ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரை தே.மு.தி.க. உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். புறக்கணிப்பிற்கான காரணமாக, ‘சட்டப் பேரவை கூட்டத்தொடரை குறைந்த நாட்கள் நடத்துகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கூட்டத்தை புறக்கணித்தோம்'' என அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
English summary
The DMDK has decided to boycott the assembly session as the session is too short.
Story first published: Friday, January 31, 2014, 11:13 [IST]