ஏற்காடு இடைத்தேர்தலில் தேமுதிக போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

தே.மு.தி.க. சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற விஜயகாந்த், இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது:
மக்கள் வரிப்பணத்தில் விடப்படும் பேருந்தில் அ.தி.மு.க. சின்னம் இடம்பெறுவது ஏற்கத்தக்கதல்ல. இது கண்டனத்திற்குரிய செயலாகும்.
இலங்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும்.
3வது அணி குறித்து டெல்லியில் அக்டோபர் 30 ஆம் தேதி இடதுசாரிகள் நடத்தும் கூட்டத்துக்கு வருமாறு எனக்கு அழைப்பு வரவில்லை.
ஏற்காடு தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார். என்று விஜயகாந்த் கூறினார்.
இதன்மூலம் ஏற்காடு இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications