உள்ளாட்சித் தேர்தலில் மநகூவுடன் தேமுதிக கூட்டணியா? திருமா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து தேமுதிகதான் முடிவெடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது தேமுதிக. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த அணியே பரிதாப தோல்வியைத் தழுவியது.

DMDK to continue with PWF?

இத்தோல்விக்குப் பின்னர் கடந்த சில மாதங்களாக மவுனமாக இருந்து வருகிறார் விஜயகாந்த். இதனால் அக்டோபர் மாதம் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக போட்டியிடுமா? என்பது தெரியாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன் கூட்டாக சென்று விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்து அந்த கட்சிதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நாங்கள் மக்கள் நலக் கூட்டியக்க கட்சிகள் ஒன்றாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்றார்.

இதனால் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா என்பதில் தொடர்ந்து குழப்பமே நீடித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+