அரசியல் மோகத்தால் நகை திருட்டில் ஈடுபட்ட தேமுதிக கவுன்சிலரின் கணவர் கைது
புதுச்சேரி: அரசியல் மோகத்தால் புதுச்சேரியில் பல்வேறு வீடுகளில் நகை திருடிய கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல். கடந்த ஜனவரி மாதம் இவரது வீட்டிற்கு வந்த இரண்டு பேர், தாங்கள் ஆதார் அட்டை சரி பார்க்க வந்திருப்பதாகக் கூறி அவரிடம் பேச்சு கொடுத்தனர். ஒருவர் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இன்னொருவர் வீட்டின் பின்புறம் சென்றார். பிறகு சிறிது நேரத்தில் அங்கிருந்து இருவரும் வெளியேறினர். அப்போது வீட்டுக்குள் வந்த செந்தில்வேல் பிரோ திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார், அப்போது, பீரோவில் இருந்த 38 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில்வேல் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
வேலூரை சேர்ந்த விஜய், கணேஷ் ஆகிய இருவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த 8 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கணேஷ் தலைமறைவானார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த கணேஷை பெரியகடை போலீசாரால் கைது செய்தனர். அவரிடமிருந்த 40 பவுன் நகைகளையும் போலீசார் மீட்டனர். கைதுசெய்யப்பட்ட கணேஷின் மனைவி சுவிதா அந்த பகுதியின் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் (தே.மு.தி.க.) ஆவார்.
இதுகுறித்து போலீஸ் விசாரணையில் கணேஷ் கூறியதாவது:
எனக்கு சிறு வயதிலிருந்தே அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்காக அதிகமாக பணம் தேவைப்பட்டது. என்னிடம் போதுமான வசதிகள் இல்லாததால் நண்பர்களுடன் சேர்ந்து திருட ஆரம்பித்தேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நானும், எனது நண்பர் விஜயும் இணைந்து ஒவ்வொரு பகுதியாக கண் காணிப்போம். பின்னர் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியிலும், முதியவர்கள் இருக்கும் வீட்டிற்கும் சென்று தங்களை அதிகாரிகளை போல காட்டிக்கொண்டு திருடி வந்தோம். புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் 70 பவுனுக்கு மேலாக நகைகளை திருடி உள்ளோம் என்றார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications