கேப்டன் ஆட்சி அமைந்தால் ரமணா ஸ்டைலில் ஊழல் எதிர்ப்பு படை உருவாக்கப்படும்.. பிரேமலதா

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைந்தால் ரமணா பட ஸ்டைலில் ஊழல் எதிர்ப்பு படை உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்து புதிய கூட்டணி உருவாகியுள்ளது. கூட்டணி உருவான கையொடு அனல் பறக்கும் பிரசாரத்தை துவங்கியுள்ளார் தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா.

Dmdk formed anti corruption Force: Premalatha

இந்நிலையில், திருச்சி உறையூரில் தேமுதிக சார்பில் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ''கேப்டன் ஞானபழம் அந்த பழம், இங்கு இல்லை தேனில் விழுந்த பழம். என்றைக்கும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர்.

திமுகவுன் கூட்டு வைத்தால் ஈசியாக ஜெயித்திருக்கலாம் அரசனை நம்பி புருசனை விட்ட கதை தான் தேமுதிகவை விட்டு சென்றவர்களின் நிலை தான். துரோகிகள் யாரையும் தமிழகம் வாழ வைத்தது இல்லை. கொடநாடு நாயகியாக இருந்தாலும் சரி, காமடியனாக இருந்தாலும் சரி கேப்டனை எதிர்த்தவர்கள் வாழ்ந்தாக சரித்திரம் இல்லை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. தமிழக போலீஸ்க்கு ரோல்மாடல் கேப்டன் தான். போலீஸ் அகாடமி பயிற்சியில் கேப்டனின் படங்களை காண்பித்து கற்றுக்கொடுக்கிறார்கள். கேப்டன் ஆட்சி அமைந்தால் ரமணா ஸ்டைலில் ஊழல் எதிர்ப்பு படை உருவாக்கப்படும்.

ஊழல்கள் பற்றி இமெயில் புகார் அனுப்பினால் உடனே நடவடிக்கைகள் எடுக்கப்படும். அம்மாவை நம்புனிங்க, அய்யாவை நம்புனிங்க, இந்த ஒருமுறை இந்த அண்ணனை நம்புங்க. ஜெயலலிதா சட்டசபையில் தான் முதன் முதலில் ஆண்மகனை பாத்திருப்பார்'' இவ்வாறு பிரேமலதா பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+