Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேமுதிகவின் நேர்காணலும் நாளையே.. கூட்டணி குறித்தும் 'சர்வே' நடத்துகிறார் விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: யாருடன் கூட்டணி என்பதை நேரடியாகச் சொல்லாமல் வழக்கம் போல கடைசி நிமிடம் வரை சொதப்பும் உத்தியை தொடர்ந்து வரும் தேமுதிக நாளை தனது வேட்பாளர் நேர்காணலை தொடங்குகஇறது.

தேமுதிக சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கான நேர்காணல் வருகிற 22ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று நடந்த காஞ்சிபுரம் மாநாட்டின்போது கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ கிங், கிங் மேக்கர் என்று புரியாத பேச்சாக பேசி விட்டு, வேட்பாளர் நேர்காணலின்போது கட்சியினரிடம் கூட்டணி குறித்து கேட்டு பிறகு கருத்தை சொல்கிறேன் என்று கூறி விட்டுப் போய் விட்டார்.

நாளை முதல் நேர்காணல்

நாளை முதல் நேர்காணல்

இந்த நிலையில் தேமுதிகவின் நேர்காணல் நாளை தொடங்குகிறது. நாளையே திமுகவின் நேர்காணலும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக தேமுதிக ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பு: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல்,22.02.2016 முதல் 01.03.2016 வரை ஒன்பது நாட்கள் தினசரி காலை 9 மணி முதல் கழக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில், சென்னை கோயம்பேட்டிலுள்ள தலைமை கழகத்தில் நடைபெற இருக்கின்றது.

மாவட்ட வாரியாக

மாவட்ட வாரியாக

எனவே, விருப்பமனு அளித்துள்ளவர்கள் தாங்கள் எந்த மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிக்கு விருப்பமனு அளித்துள்ளீர்களோ, அந்த மாவட்டத்திற்கான நேர்காணல் நடைபெறும் தேதியில் வருகை தந்து நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். வ

ஒரிஜினல் சாதிச் சான்றிதழ் அவசியம்

ஒரிஜினல் சாதிச் சான்றிதழ் அவசியம்

வரும்பொழுது, கழக உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தாங்கள் கல்வி சான்றிதழ், தனித் தொகுதிக்கு தேவையான ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் (ORIGINAL)சான்றிதழ்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

கீழ்க்கண்ட அட்டவணைப்படி

கீழ்க்கண்ட அட்டவணைப்படி

கீழ்க்கண்ட அட்டவணைப்படி குறிப்பிட்ட தேதிகளில், கீழ்க்கண்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெறும் தேதி விவரம்: பிப்ரவரி 22 திங்கள்கிழமை -திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி

23ம் தேதி

23ம் தேதி

பிப்ரவரி 23 செவ்வாய்கிழமை -தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம் பிப்ரவரி 24 புதன்கிழமை - மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை பிப்ரவரி 25 வியாழக்கிழமை - சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், மேற்கு சென்னை

26ம் தேி

26ம் தேி

பிப்ரவரி 26 வெள்ளிக்கிழமை - கோயம்புத்தூர்,திருப்பூர், ஈரோடு பிப்ரவரி 27 சனிக்கிழமை - நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம் பிப்ரவரி 28 ஞாயிற்றுக்கிழமை - நாமக்கல், சேலம், கடலூர்

29ம் தேதி

29ம் தேதி

பிப்ரவரி 29 திங்கள்கிழமை - திருச்சிராப்பள்ளி,வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மார்ச் 1 செவ்வாய்கிழமை - தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், புதுச்சேரி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+