Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

68-வது சுதந்திர தினம்: தமிழக அரசியல் கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் 68-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, தமிழக அரசியல் கட்சி அலுவலகங்களில், கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.

அறிவாலயம்

திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் துரைசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் மேயர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

DMDK’s I-Day celebration

கம்யூனிஸ்ட்டுகள் கொண்டாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தியாகராய நகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை தியாகராய நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா தேசிய கொடியை ஏற்றினார். இதில், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

DMDK’s I-Day celebration

கமலாலயம்

பாரதிய ஜனதாவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அந்த கட்சியின் மூத்த தலைவர் லட்சுமணன் தேசிய கொடியை ஏற்றி வாழ்த்து தெரிவித்தார். இதில், தமிழிசை செளந்திரராஜன், வானதி ஸ்ரீநிவாசன், எச். ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சத்தியமூர்த்தி பவன்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தேசிய கொடியை ஏற்றினார். இதில், காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

DMDK’s I-Day celebration

விஜயகாந்த் கொடியேற்றினார்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, கழகத் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகிகளும், உயர்மட்ட குழு உறுப்பினர்களும்,அனைத்து மாவட்ட செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும், மகளிர் அணி, தொழிற்சங்க நிர்வாகிகள், பள்ளி குழந்தைகள்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சோ. அய்யர்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையர் முனைவர் சோ. அய்யர் தேசியக் கொடியேற்றினார். பின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பா. ஜோதி நிர்மலாசாமி, மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் கோவிலில்

சுதந்திர தினத்தை ஒட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் 140 அடி உயர ராஜகோபுரத்தில் தேசிய கொடியேற்றப் பட்டது. பொது தீட்சிதர்கள் சார்பில் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. பின், 140 அடி உயரமுள்ள ராஜகோபுர உச்சியில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+