68-வது சுதந்திர தினம்: தமிழக அரசியல் கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டம்
சென்னை: நாட்டின் 68-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, தமிழக அரசியல் கட்சி அலுவலகங்களில், கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
அறிவாலயம்
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் துரைசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் மேயர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

கம்யூனிஸ்ட்டுகள் கொண்டாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தியாகராய நகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சென்னை தியாகராய நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா தேசிய கொடியை ஏற்றினார். இதில், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கமலாலயம்
பாரதிய ஜனதாவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அந்த கட்சியின் மூத்த தலைவர் லட்சுமணன் தேசிய கொடியை ஏற்றி வாழ்த்து தெரிவித்தார். இதில், தமிழிசை செளந்திரராஜன், வானதி ஸ்ரீநிவாசன், எச். ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சத்தியமூர்த்தி பவன்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தேசிய கொடியை ஏற்றினார். இதில், காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

விஜயகாந்த் கொடியேற்றினார்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, கழகத் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகிகளும், உயர்மட்ட குழு உறுப்பினர்களும்,அனைத்து மாவட்ட செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும், மகளிர் அணி, தொழிற்சங்க நிர்வாகிகள், பள்ளி குழந்தைகள்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சோ. அய்யர்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையர் முனைவர் சோ. அய்யர் தேசியக் கொடியேற்றினார். பின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பா. ஜோதி நிர்மலாசாமி, மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் கோவிலில்
சுதந்திர தினத்தை ஒட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் 140 அடி உயர ராஜகோபுரத்தில் தேசிய கொடியேற்றப் பட்டது. பொது தீட்சிதர்கள் சார்பில் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. பின், 140 அடி உயரமுள்ள ராஜகோபுர உச்சியில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications