குடிப்பது தப்பா என்று கேட்ட விஜயகாந்த் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பேசலாமோ...?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரணா்கவே உள்ளன. அப்படித்தான் அவரது கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் அமைந்துள்ளது.
என்னை குடிக்கிறேன், குடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். குடிக்கத்தானே கடையைத் திறந்து வச்சுருக்கீங்க. யாருமே இங்கு குடிக்கவில்லையா என்று ஒரு முறை பேசினார் விஜயகாந்த்.
ஆனால் நேற்றைய தேமுதிக பொதுக்குழுவில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து தீர்மானம் போட்டுள்ளனர்.

தேமுதிகவின் டாஸ்மாக் தீர்மானம் சொல்வது என்ன...
தமிழ்நாட்டில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதற்கு தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களை குடிக்கு அடிமையாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கிராமந்தோறும், தெருக்கள் தோறும்...
கிராமந்தோறும், தெருக்கள்தோறும் மதுக்கடைகளை திறந்தது போதாது என்று சொல்லி, மிகப்பெரிய வணிக வளாகங்களில் (Shopping Mall) எலைட் என்ற பெயரில் ஏசி வசதிகளுடன் மதுக்கடைகளை திறந்துள்ளது.

இளைஞர்களை சீரழிக்கிறார்கள்
தமிழ்நாட்டில் பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் திண்டாடிக் கொண்டுள்ளனர். அவர்களின் வேலை வாய்ப்பிற்கு உரிய வழிவகைகளை காணாமல் இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டிய தமிழக அரசு மதுக்கடைகளை தொடர்ந்து திறப்பதன் மூலம் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது.

தாய்மார்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது...
தாய்மார்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. இதுபோன்று மதுக்கடைகள் திறப்பதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்தத் தீர்மானம் சொல்கிறது.

ஆனால் மகன் பட பூஜையின்போது...
ஆனால் சமீபத்தில் தனது மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமான பட விழாவின்போது விஜயகாந்த் பேசுகையில், கிட்டத்தட்ட குடிப்பழக்கத்திற்கு ஆதரவுப் பேச்சாகவே இருந்தது.

குடிக்கிறது பெரிய தப்பா என்ன...
அப்போது விஜயகாந்த் பேசுகையில், குடிக்கிறேன் குடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். யாருமே இங்கு குடிக்கவில்லையா? குடிக்கிறது பெரிய தப்பா என்ன? அப்புறம் எதுக்கு தமிழ்நாடு முழுவதும் கடையை திறந்துவச்சிருக்கீங்க என்று கேட்டார்.
முரண்பாடாக இருக்கிறதா இல்லையா...












Click it and Unblock the Notifications