சென்னையில் மோடி தூதருடன் சுதீஷ் சந்திப்பு: தேமுதிக- பாஜக கூட்டணி உறுதியானது?
சென்னை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதியாகிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தேமுதிக அறிவிக்கவில்லை. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் மார்ச் 3--ந் தேதி சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் தூதர் சென்னை வந்ததாகவும் அவருடன் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது பாஜக அணியில் தேமுதிக இடம்பெறும் என்று உறுதியளிக்கப்பட்டதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேமுதிகவைப் பொறுத்தவரையில் 14 முதல் 19 தொகுதிகள் வரை கேட்கிறது. பாரதிய ஜனதாவோ 12 தொகுதிகள் ஒதுக்க தயாராக இருக்கிறது.
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியோ, தாங்கள் வேட்பாளர்களை அறிவித்த 10 தொகுதிகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறதாம். அதனால் அந்த கட்சி, பாஜக அணியில் இடம்பெறுமா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications