ஆளுநர் மாளிகை முற்றுகை.. விஜயகாந்த் உட்பட ஆயிரக்கணக்கான தேமுதிகவினர் கைது
சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

சென்னை: ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் கடந்த சில நாட்களாகவே போராட்டக்களமாக காட்சியளிக்கிறது. ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதை கண்டித்தும் தேமுதிகவினர் இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதாவும் பங்கேற்றார்.
எங்களது தேவை காவிரி நீரப்பா என்றும் சூரப்பா இல்லை என்றும் தேமுதிகவினர் முழக்கமிட்டனர். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற தேமுதிகவினரை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications