மோடி மாதிரி கலர் சட்டை போட்டால் ஆட்சியை பிடிக்க முடியுமா?: ஸ்டாலினை கேட்கிறார் வைகோ!
கரூர்: வரும் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கம் வென்று ஆட்சியைப் பிடிக்கும். அப்போது திமுக அதிமுகவினர் ஊழல் செய்து சேர்த்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மோடியை போல அடிக்கடி ஆடைகளை மாற்றி ஆட்சியை பிடிக்கலாம் என்று கனவு காண்பதாகவும் திமுக பொருளாளர் ஸ்டாலினை அவர் கிண்டலடித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறுமலர்ச்சி பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். கரூர் தான்தோன்றிமலையில் நகர கழகம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மற்றும் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பேசிய வைகோ, திமுக, அதிமுக இரு கட்சிகளும் கமிஷனுக்காக ஆட்சியைப் பிடிக்க போராடுகிறார்கள். திமுக ஆட்சியில் 15 சதவீதமாக இருந்த கமிஷன் அதிமுக ஆட்சியில் 25 சதவீதமாக மாறியுள்ளது. அடுத்து 35 சதவீத கமிஷனுக்கு திமுக துடிக்கிறது என்றார்.

கலர் கலர் ஆடை
திமுக ஆட்சியில் எவரும் சொத்து வைத்திருக்க முடியவில்லை. இப்போது இனிமேல் தப்பு செய்ய மாட்டேன் என சொல்கிறார்கள். ஒருவர் புதுசா டீ குடிக்கிறார். ஆட்டோவில் ஒரு நிமிடம் பயணிக்கிறார். மோடியை போல அடிக்கடி ஆடைகளை மாற்றி ஆட்சியை பிடிக்கலாம் என யாரோ சொல்லி இருக்கிறார்கள்.

கையெழுத்து போட்டது ஏன்?
தமிழகத்தின் ஒரு பகுதியை பாழ்படுத்தும் மீத்தேன் திட்டத்தில் மு.க.ஸ்டாலின் எப்படி கையெழுத்திட்டார்? இதுபற்றி கேட்டால் கலைஞர் தெரியாமல் போட்டுவிட்டார் என்கிறார்.

மாற்றம் வரவேண்டும்
கொலை செய்துவிட்டு தெரியாமல் செய்தேன் என்றால் போலீஸ் விட்டு விடுமா? 65 சதவீத மக்கள் கட்சி சாராமல் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

ஊழல் சொத்துக்கள்
மக்கள் நல கூட்டியக்கம் ஆட்சிக்கு வந்தால் அதிமுக , திமுக ஆகிய இரு இயக்கங்களும் ஊழல் செய்து சேர்த்த சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். அதைதான் நீதிபதி குன்ஹாவும் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

ஒளிமயமான எதிர்காலம்
கட்சியில் இருந்து சென்றவர்களுக்காக வருத்தப்படுகிறேன். என் மீது குற்றம் சாட்டினாலும் விமர்ச்சிக்க மாட்டேன். ஒளிமயமான எதிர்காலத்தை காண, அதில் பங்கெடுக்க முடியாமல் அவர்களை அவர்களே அழித்து கொண்டுவிட்டார்களே என கவலைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார் வைகோ.
-
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications