லோக்சபா தேர்தல்.. முதல் முறையாக 35 தொகுதிகளில் அ.தி.மு.க.- தி.மு.க. நேரடி மோதல்
சென்னை: லோக்சபா தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிமுகவும் திமுகவும் 35 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அதேபோல் இரண்டு திராவிட கட்சிகளும் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் லோக்சபா தேர்தலை சந்திப்பதும் இதுவே முதல் முறை.
முதல் முறையாக 1952-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. சுதந்திர அப்போது முதக் 67ஆம் ஆண்டு காங்கிரஸ் கை மட்டுமே ஓங்கி இருந்தது.
1967-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. 25 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரசை வீழ்த்தியது. தற்போது 45 ஆண்டுகள் ஆன நிலையிலும் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் எழுந்திருக்க முடியவில்லை.

அதிமுக தனித்து போட்டி
தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் அதன் பிறகு தேர்தல்களை சந்தித்து வருகிறது. வரும் தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது.

திமுக அணியில் கூட்டணிக்கு 5
அதே நேரத்தில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், திருவள்ளூர் தொகுதிகள், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி, மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

35-ல் திமுக போட்டி
புதுச்சேரி உள்ளிட்ட எஞ்சிய 35 தொகுதிகளிலும் தி.மு.க.வே நேரடியாக போட்டியிடுகிறது. அதாவது 35 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடியாக மோதுகிறது.

முதல் முறையாக..
லோக்சபா தேர்தல் வரலாற்றில் அ.தி.மு.க. - தி.மு.க. இப்படி 35 தொகுதிகளில் தொகுதிகளில் மோதுவது இதுதான் முதல்முறையாகும்.

தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை
அத்துடன் திராவிட கட்சிகளான திமுகவும் அதிமுகவும் முதல் முறையாக பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற தேசியக் கட்சி எதனுடனும் கூட்டணி அமைக்காமல் லோக்சபா தேர்தலை சந்திப்பதும் இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications