திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவுக்கு ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி தொகுதிகள்
சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் தேமுதிக கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சந்திரகுமார் - ஈரோடு கிழக்கு தொகுதியிலும், பார்த்திபன் மேட்டூர் தொகுதியிலும், சி.எச். சேகர் கும்மிடிப்பூண்டி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் தலைவர் சந்திரகுமார் தெரிவித்தார்.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் தேமுதிவில் கலகக்குரல் வெடித்தது. மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததற்கு, தேமுதிக கொள்கை பரப்பு செயலராகச் செயல்பட்டு வந்த வி.சி.சந்திரகுமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை கட்சியிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீக்கினார்.

இதையடுத்து "மக்கள் தேமுதிக' எனும் புதிய அமைப்பை உருவாக்குவதாக சந்திரகுமார் அறிவித்தார். பின்னர் நேற்று மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார், தேமுதிகவில் இருந்து விலகிய பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் சந்திரகுமார் உள்ளிட்டோர் இன்று மீண்டும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிக கட்சிக்கு ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. 3 தொகுதிகளிலும் மக்கள் தேமுதிக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதன்படி சந்திரகுமார் - ஈரோடு கிழக்கு தொகுதியிலும், பார்த்திபன் மேட்டூர் தொகுதியிலும், சி.எச். சேகர் கும்மிடிப்பூண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என அந்த கட்சியின் தலைவர் சந்திரகுமார் அறிவித்தார்.
ஏற்கனவே இவர்கள் மூவரும் தேமுதிக சார்பில் 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இதே தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications