விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு சீட்தான்.. சிதம்பரம் தொகுதியை ஒதுக்கியது திமுக
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு சிதம்பரம் லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 பொதுத் தொகுதிகள், 2 தனித் தொகுதிகளை கேட்டிருந்தது. ஆனால் திமுக இதனை ஏற்க மறுத்தது.
இதனால் திமுக- விடுதலை சிறுத்தைகள் இடையேயான பேச்சுவார்த்தை இழுபறியானது. இந்நிலையில் திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இருப்பினும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு தொகுதியை ஏற்றதற்காக கடும் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.