கருணாநிதிக்கு மெரீனா தர முடியாதா.. போராட்டத்தில் குதித்தனர் திமுகவினர்
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி தர மறுத்ததை எதிர்த்து திமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். அவரது உடலை மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுக திட்டமிட்டது. இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவரது குடும்பத்தினர், கட்சியினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து முறைப்படி மனு அளித்து அனுமதி கோரினர்.

ஆனால் தற்போது அனுமதி தர தமிழக அரசு மறுத்து விட்டது. பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர்.
காவேரி மருத்துவமனை முன்பு கூடியுள்ள திமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் தர வேண்டும். அதுவரை போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications