காவேரி மருத்துவமனையிலிருந்து வெளிநபர்கள் வெளியேற்றம்
காவேரி மருத்துவமனையிலிருந்து வெளிநபர்கள் வெளியேற்றப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவேரி மருத்துவமனையிலிருந்து வெளிநபர்கள் வெளியேற்றப்பட்டனர். அவரது குடும்பத்தினரும் வெளியேறி வருகின்றனர்.
கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைவானத் தொடர்ந்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இன்று 2-ஆவது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் காவேரி மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியாகவுள்ளது. இதற்காக அங்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். மருத்துவமனைக்குள் தொண்டர்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மருத்துவமனையிலிருந்து அவரது குடும்பத்தினரும் வெளியேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உதயநிதி, துரை தயாநிதி உள்ளிட்டோர் வெளியேறினர்.












Click it and Unblock the Notifications