கொண்டாட்டம் வேண்டாம்.. மறுத்த கனிமொழி… வாழ்த்தக் குவிந்த பெண்கள்
வறட்சியின் காரணமாக விவசாயிகள் மரணித்து வரும் நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கனிமொழி அறிவித்திருந்தார். எனினும் இன்று பெண்கள் மற்றும் திமுகவின் முக்கிய தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து
சென்னை: திமுக ராஜ்ய சபா எம்பி கனிமொழியின் பிறந்த நாள் இன்று. வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், அதிர்ச்சியால் மரணமடைவதும் நடந்து வரும் சூழலில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கனிமொழி அறிவித்தார். எனினும் திமுகவைச் சேர்ந்த மகளிர் மற்றும் முக்கிய தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் காலையில் இருந்தே திமுக பெண், ஆண் தொண்டர்கள் நேரில் வந்து வந்து தெரிவித்தனர். கனிமொழியின் தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உள்ளிட்ட ஏராளமான திமுக முக்கியஸ்தர்கள் நேரில் வந்து கனிமொழிக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக மகளிர் அணியின் சார்பில் ஏராளமான பெண்கள் கனிமொழி வீட்டிற்கு வந்து சால்வை அணிவித்து பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இதுதவிர, கனிமொழி இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளைக் கொண்டவர் என்பதால் இலக்கிய நண்பர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை நேரிலும் தொலைபேசியிலும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications